என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டன் பொறுப்பில் ரோகித்சர்மா சாதனை
Byமாலை மலர்12 Nov 2018 6:35 AM GMT (Updated: 12 Nov 2018 6:35 AM GMT)
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3-வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் கேப்டன் பதவியில் ரோகித்சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். #RohitSharma #INDvWI
சென்னை:
ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இந்திய அணி இதுவரை 20 ஓவரில் 11 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 10-ல் வெற்றி பெற்றது. 1 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இதன்மூலம் மைக்கேல் கிளார்க், சோயிப் மாலிக்கை அவர் முந்தி சாதனை புரிந்தார்.
20 ஓவர் போட்டியில் 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஏற்கனவே 2017 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது.
ரோகித்சர்மா நேற்று 4 ரன்னில்ஆட்டம் இழந்தார். பவுண்டரி மூலம் இந்த ரன்னை அவர் எடுத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் அவரது 200-வது பவுண்டரியாகும். 200 பவுண்டரி அடித்த 2-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி 214 பவுண்டரி அடித்துள்ளார்.
தில்சான் (இலங்கை) 223 பவுண்டரியுடன் முதல் இடத்திலும், முகமது ஷேசாத் (ஆப்கானிஸ்தான்) 218 பவுண்டரியுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். கோலி 3-வது இடத்திலும், குப்திலும், ரோகித்சர்மாவும் இணைந்து 4-வது இடத்திலும் உள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தில் தவான் 92 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு 90 ரன் எடுத்து இருந்தார். ரிசப்பண்ட் 20 ஓவரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். #RohitSharma #INDvWI
ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இந்திய அணி இதுவரை 20 ஓவரில் 11 ஆட்டத்தில் விளையாடி உள்ளது. இதில் 10-ல் வெற்றி பெற்றது. 1 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இதன்மூலம் மைக்கேல் கிளார்க், சோயிப் மாலிக்கை அவர் முந்தி சாதனை புரிந்தார்.
20 ஓவர் போட்டியில் 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஏற்கனவே 2017 டிசம்பரில் இலங்கைக்கு எதிராக அவரது தலைமையிலான அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது.
ரோகித்சர்மா நேற்று 4 ரன்னில்ஆட்டம் இழந்தார். பவுண்டரி மூலம் இந்த ரன்னை அவர் எடுத்தார். 20 ஓவர் சர்வதேச போட்டியில் அவரது 200-வது பவுண்டரியாகும். 200 பவுண்டரி அடித்த 2-வது இந்தியர் ரோகித்சர்மா ஆவார். விராட்கோலி 214 பவுண்டரி அடித்துள்ளார்.
தில்சான் (இலங்கை) 223 பவுண்டரியுடன் முதல் இடத்திலும், முகமது ஷேசாத் (ஆப்கானிஸ்தான்) 218 பவுண்டரியுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். கோலி 3-வது இடத்திலும், குப்திலும், ரோகித்சர்மாவும் இணைந்து 4-வது இடத்திலும் உள்ளனர்.
நேற்றைய ஆட்டத்தில் தவான் 92 ரன்கள் எடுத்து முத்திரை பதித்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு 90 ரன் எடுத்து இருந்தார். ரிசப்பண்ட் 20 ஓவரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். #RohitSharma #INDvWI
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X