search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்து சிலிர்த்துப்போன பாகிஸ்தான் அணி பயிற்சியாளர்
    X

    பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்து சிலிர்த்துப்போன பாகிஸ்தான் அணி பயிற்சியாளர்

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் வலைப் பயிற்சியைப் பார்த்து அசந்து விட்டேன் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் குரூப் பிரிவிலும், சூப்பர் 4 சுற்றிலும் மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணியால் இந்தியாவிற்கு எந்த அளவிலும் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். குறிப்பாக ‘டெத்’ ஓவரில் அசத்தினார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் துபாய் ஐசிசி அகாடமியில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பும்ராவின் பந்து வீச்சை பார்த்து சிலிர்த்து போய்விட்டார். பும்ராவின் பந்து வீச்சு வீடியோவை காண்பித்து பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பேன் என்றார்.



    இதுகுறித்து பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில் ‘‘பயிற்சியின் போது நாங்கள் 20 நிமிடம் அமர்ந்து, பும்ராவின் வலைப் பயிற்சியை பார்த்தோம். யார்க்கர், யார்க்கர் என அடுத்தடுத்து யார்க்கராக வீசி அசத்தினார். அவரது பந்து வீச்சு என்னை மிகவும் ஈர்த்தது. அதை எங்களுக்கு எதிராக செய்தும் காட்டினார்.

    நாங்கள் பும்ராவின் பந்து வீச்சை வீடியோவை காண்பித்து, ‘டெத்’ ஓவரில் எப்படி பந்து வீச வேண்டும் என்பதை எங்களது வீரர்களுக்கு கற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

    நாளை நடைபெறும் வங்காள தேசம் - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், வெள்ளிக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
    Next Story
    ×