search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றோம்- இந்திரஜித்
    X

    டிஎன்பிஎல் கிரிக்கெட் - நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றோம்- இந்திரஜித்

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார். #TNPL #TNPL2018 #DDvRTW
    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலுக்கு எதிராக நம்பிக்கையோடு விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக திருச்சி அணி கேப்டன் இந்திரஜித் கூறியுள்ளார்.

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது, திண்டுக்கல் டிராகன்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. பரப்பான இந்த ஆட்டத்தில் திருச்சி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து திருச்சி வாரியர்ஸ் கேப்டன் பாபா இந்திரஜித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    173 ரன் என்பது இந்த ஆடுகளத்தில் சிறந்த ஸ்கோர் தான். இதனால் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் 87 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து விட்டோம்.

    எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனாலும் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதும் தெரியும். ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு வந்தவுடன் தோல்வியின் எல்லையை குறைக்க முடியும் என்று நினைத்தோம்.

    கடைசி 5 முதல் 6 ஓவரில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். எல்லாம் நல்ல படியாக அமைந்ததால் வெற்றி பெற்றோம். இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது.

    சுரேஷ் குமார் நீண்ட காலமாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் தான் வீரர்கள் ஏலத்தில் அவரை விரைவிலேயே எடுத்தோம். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை வெளிப்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்வி குறித்து திண்டுக்கல் அணி வீரர் ஹரி நிஷாந்த் கூறும் போது 172 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். சில முக்கியமான கேட்ச்களை தவறவிட்டோம். எங்களது பீல்டிங் தரத்தை மேம்படுத்த வேண்டும்“ என்றார்.

    இன்று ஒய்வு நாளாகும். நாளைய 2-வது ‘லீக்‘ ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL #TNPL2018 #DDvRTW
    Next Story
    ×