search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் ஹசாரே டிராபியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா
    X

    விஜய் ஹசாரே டிராபியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா

    விஜய் ஹசாரே டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கர்நாடகா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #VijayHazareTrophy #Karnataka

    புதுடெல்லி:

    பிசிசிஐ-யின் கீழ் இயங்கும் மாநில அணிகளுக்கு இடையில் விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி கர்நாடகாவின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்காமல் 160 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மகாராஷ்டிரா அணியில் ஸ்ரீகாந்த் முண்டே 50 ரன்களும், நவுஷத் ஷைக் 42 ரன்களும் எடுத்தனர். கர்நாடகா அணி சார்பில் 4 கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. அந்த அணி 30.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கர்நாடகா அணியின் மன்யக் அகர்வால் 81 ரன்களும், கருண் நாயர் 70 ரன்களும் எடுத்தனர். மகாராஷ்டிரா அணி பந்துவீச்சில் சத்யஜீத் பச்சவ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் கர்நாடகா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆந்திரா - சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 27-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. #VijayHazareTrophy #Karnataka
    Next Story
    ×