என் மலர்
நீங்கள் தேடியது "விஜய் ஹசாரே டிராபி"
- முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சவுராஷ்டிர அணி 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்தது.
லீக் சுற்று, காலிறுதி சுற்று மற்றும் அரையிறுதி சுற்றுகள் முடிவில் சவுராஷ்டிரா, விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சவுராஷ்டிர அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய விதர்பா அணி 50 ஓவரில் 317 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் அதர்வா டைட் சதமடித்து 128 ரன்கள் குவித்தார். யாஷ் ரதோட் 54 ரன்னும், அமன் மோகடே 33 ரன்னும் எடுத்தனர்.
சவுராஷ்டிரா அணிச் ஆர்பில் அன்குர் பன்வார் 4 விக்கெட்டும், சிராக் ஜானி, சேடன் சகாரியா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களமிறங்கியது. அந்த அணியின் மன்காட் 88 ரன்னும், சிராக் ஜானி 64 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், சவுராஷ்டிரா அணி 48.5 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற விதர்பா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
விதர்பா சார்பில் யாஷ் தாக்குர் 4 விக்கெட்டும், நசிகேத் 3 விக்கெட்டும், தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது அதர்வா டைடுக்கும், தொடர் நாயகன் விருது அமன் மோகடேவுக்கும் அளிக்கப்பட்டது.
- முதல் அரையிறுதியில் விதர்பா அணி நடப்பு சாம்பியன் கர்நாடகாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.
- 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணி பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரில் நடந்து வந்தது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. முதல் அரையிறுதியில் விதர்பாவும், 2வது அரையிறுதியில் சவுராஷ்டிரா அணியும் வென்றன.
இந்நிலையில், மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.
இதில் ஹர்விக் தேசாய் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும், ஹர்ஷ் துபே தலைமையிலான விதர்பா அணியும் மோதுகின்றன.
சவுராஷ்டிரா அணி அரையிறுதியில் பஞ்சாப்பை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதேபோல்,
விதர்பா அணி அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவுக்கு அதிர்ச்சி அளித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சவுராஷ்டிரா அணியில் பேட்டிங்கில் ஹர்விக் தேசாய் (561 ரன்), விஸ்வராஜ் ஜடேஜா (536), சம்மார் காஜரும், பந்துவீச்சில் அன்குர் பன்வார், சேத்தன் சகாரியாவும் பலம் சேர்க்கின்றனர்.
விதர்பா அணியில் பேட்டிங்கில் அமன் மொகாதே (781 ரன்), துருவ் ஷோரேய் (515), ரவிக்குமார் சமர்த், பந்து வீச்சில் நாசிகெட் புத், யாஷ் தாக்குர், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சவுராஷ்டிரா அணி 3-வது முறையாக கோப்பையை வெல்ல முயற்சிக்கும். அதேநேரம், விதர்பா அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும்.
சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.
- சவுராஷ்டிரா தொடக்க ஜோடி 23 ஓவரில் 172 ரன்கள் குவித்தது.
- சவுராஷ்டிரா வீரர் விஷ்வராஜ் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 127 பந்தில் 165 ரன்கள் விளாசினார்.
விஜய் ஹசாரே தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப்- சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரரும் கேப்டனுமான பிரப்சிம்ரன் சிங் 87 ரன்களும் அடுத்து வந்த அன்மோல்பிரீத் சிங் சரியாக 100 ரன்களும் அடிக்க பஞ்சாப் அணி 50 ஓவரில் 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
பின்னர் 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணி களம் இறங்கியது. கேப்டன் ஹார்விக் தேசாய்- விஷ்வராஜ் ஜடேஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹார்விக் கேசாய் 63 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ஓவரில் 172 ரன்கள் குவித்தது.
அடுத்து விஷ்வராஜ் ஜடேஜா உடன் பிரேராக் மங்கட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. விஷ்வராஜ் ஜடேஜா தொடர்ந்து சதம் விளாசி, தொடர்ந்து விளையாடினார். அவர் 127 பந்தில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க சவுராஷ்டிரா 39.3 ஓவரிலேயே 293 ரன்களை எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேராக் மங்கட் 49 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சவுராஷ்டிரா நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் விதர்பாவை எதிர்கொள்கிறது.
- முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய விதர்பா அணி 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதி முடிவில் கர்நாடகா, சவுராஷ்டிரா, பஞ்சாப், விதர்பா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் கர்நாடகா, விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கர்நாடக அணி 49.4 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கருண் நாயர் 76 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 54 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா அணி சார்பில் தர்ஷன் நல்கண்டே 5 விக்கெட்டும், யாஷ் தாக்குர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அமான் மோகடே பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரவிகுமார் சமர்த் 76 ரன்னும், துர்வ் ஷோரே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், விதர்பா அணி 46.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதன்மூலம் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி தொடரில் இருந்து வெளியேறியது.
நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதி போட்டியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
- விஜய் ஹசாரே டிராபியின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன.
- காலிறுதிச் சுற்றுகள் பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளன.
புதுடெல்லி:
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் 'எலைட்' பிரிவில் இடம் பெற்ற 23 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதின. இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று நடந்து முடிந்தன.
அகமதாபாத்தில் நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான தமிழக அணி கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்–றது. தொடர்ந்து 4 தோல்வி கண்டு காலிறுதி வாய்ப்பை இழந்து விட்டது தமிழக அணி.
இந்நிலையில், லீக் சுற்றுகள் முடிவில் ஏ பிரிவில் முதல் இரு இடங்களைப் பிடித்த கர்நாடகம், மத்திய பிரதேசம், பி பிரிவில் உத்தர பிரதேசம், விதர்பாவும், சி பிரிவில் பஞ்சாப், மும்பையும், டி பிரிவில் டெல்லி, சவுராஷ்டிரா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதிச் சுற்று பெங்களூருவில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பறக்கவிட்ட வீரர் என்ற வரலாறு படைத்தார் ருதுராஜ்.
ருதுராஜ் மொத்தமாக 112 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அடுத்த இடங்களில் 108 சிக்ஸர்களுடன் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.
- ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின
- ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் மகாராஷ்டிரா, கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 134 ரன்கள் அடித்து கடைசி வரைக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் விஜய் ஹசாரே தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அங்கித் பாவ்னே சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் (15) சமன் செய்தார்
ருதுராஜ், அங்கித் ஆகியோர் 15 சதங்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்த இடங்களில் உள்ள படிக்கல், மயங்க் அகர்வால் ஆகியோர் 13 சதங்கள் அடித்துள்ளனர்.
- டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஐதராபாத் அணி 50 ஓவரில் 352 ரன்கள் குவித்தது.
ராஜ்கோட்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், வங்காளம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளம் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமன்ராவ் பெரலா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார்.
முதல் விக்கெட்டுக்கு ராகுல் சிங், அமன்ராவ் பெரலா ஜோடி 104 ரன்கள் சேர்த்தது. ராகுல் சிங் 65 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் திலக் வர்மா 34 ரன்னிலும், அபிராத் ரெட்டி 5 ரன்னிலும், பிரக்ஞய் ரெட்டி 22 ரன்னிலும், பிரணவ் வர்மா 7 ரன்னிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய அமன்ராவ் பெரெலா இரட்டை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அமன்ராவ் பெரலா 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜெய்ப்பூர்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா, மும்பை அணிகள் மோதின.
முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 366 ரன்கள் குவித்தது. குல்கர்னி 114 ரன்னும், பிரித்வி ஷா 71 ரன்னும், ருதுராஜ் 66 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய மும்பை அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 128 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் வேகமாக 100 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். அவரது இந்த சாதனையை பெருமைப்படுத்தும் வகையில் சி.எஸ்.கே. போஸ்டர் வெளியிட்டுள்ளது.
- முதலில் ஆடிய கர்நாடக அணி 50 ஓவரில் 332 ரன்கள் குவித்தது.
- சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார்.
அகமதாபாத்:
விஜய் ஹசாரே டிராபி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில் கர்நாடகா, திரிபுரா அணிகள் மோதின.
இதில், முதலில் ஆடிய நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் சதமடித்து 108 ரன்கள் சேர்த்தார். நடப்பு தொடரில் படிக்கல் அடித்த 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி 49 ஓவரில் 252 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கர்நாடக அணி 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் 5-வது வெற்றியை ருசித்த கர்நாடகா அணி ஏ பிரிவில் முதலிடத்தில் நீடிக்கிறது.
- முதலில் விளையாடிய குஜராத் அணி 318 ரன்கள் குவித்தது.
- அக்சர் படேல் 111 பந்தில் 130 ரன்கள் குவித்தார்.
விஜய் ஹசாரே டிராபியில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் குஜராத்- ஆந்திரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.
ஒரு கட்டத்தில் அந்த அணி 99 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் விஷால் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 60 பந்தில் 70 ரன்கள் விளாசினார். அக்சர் படேல் 111 பந்தில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 130 ரன்கள் குவித்தார்.
பின்னர் 319 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆந்திரா களம் இறங்கியது. தொடக்க வீரர் ஞானேஷ்வர் 125 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சோனி பிரசாத் 26 பந்தில் 48 ரன்கள் விளாசினார்.
இருந்தபோதிலும், ஆந்திராவால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆந்திரா 311 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- 60 பந்தில் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சண்டிகர் அணிக்கெதிராக டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிங்கு சிங் அபாரமாக விளையாடி 60 பந்தில் 106 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். முந்தைய ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும்.
ஜுயல் 118 பந்தில் 134 ரன்கள் குவிக்க, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜுரல் 57 பந்தில் 67 ரன்கள் அடிக்க உத்தர பிரதுசம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குவித்தது.
பின்னர் 368 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சண்டிகர் 29.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 140 ரன்னில் சுருண்டது. இதனால் உத்தர பிரதேசம் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.






