search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் தலைமையில் சிஎஸ்கே-யில் விளையாட இருப்பது மகிழ்ச்சி - சான்ட்னெர்
    X

    டோனியின் தலைமையில் சிஎஸ்கே-யில் விளையாட இருப்பது மகிழ்ச்சி - சான்ட்னெர்

    ஐபிஎல் 2018 சீசனில் மகேந்திர சிங் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி என சான்ட்னெர் தெரிவித்துள்ளார். #IPL2018
    இந்தியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டின் 11-வது சீசன் ஏப்ரல் 7-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சான்ட்னெரை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    மகேந்திந்திர சிங் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என சான்ட்னெர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சான்ட்னெர் கூறுகையில் ‘‘நான் சர்வதேச போட்டியில் டோனிக்கு எதிராக பந்து வீசியதை விட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வலைப்பயிற்சியின் போது அவருக்கு பந்து வீச இருப்பது என்று மகிழ்ச்சியாக இருக்கும்.



    சிஎஸ்கே அணியுடன் இணைய இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனுபவ வீரர்களான டோனி, ரெய்னா, ஜடேஜா போன்ற வீரர்களுடன் பேசுவது, விளையாடுவது சிறப்பானதாக இருக்கும்.

    ஐபிஎல் தொடரில் ஒரு வீரராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அத்துடன் சிஎஸ்கே குடும்பத்தில் இணைய இருப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஐபிஎல் உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடர். அதிகஅளவிலான ரசிகர்கள் மத்தியில் எனது திறமையை வெளிப்படுத்த இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சிஎஸ்கே அணி வெற்றி பெறவேண்டும், சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அல்டிமேட்லி குறிக்கோள்’’ என்றார்.
    Next Story
    ×