search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சான்ட்னெர்"

    கேப்டன் பதவியில் டோனி 50-வது வெற்றியை பெற்ற போட்டியில் பிராவோ சிக்ஸ் அடித்தும், 100-வது வெற்றியை பெற்ற போட்டியில் சான்ட்னெர் சிக்ஸ் அடித்தும் அசத்தியுள்ளனர். #IPL2019 #MSDhoni
    ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்தது. எம்எஸ் டோனிக்கு கேப்டனாக இது 100-வது வெற்றியாகும்.

    எம்எஸ் டோனிக்கு சாதனையான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை ருசித்துள்ளது. கடந்த 2012 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது.



    கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. ராஜட் பாட்டியா பந்து வீச வெயின் பிராவோ கடைசி பந்தை சந்தித்தார். லோ புல்டாஸ்-ஆக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கி வெயின் பிராவோ வெற்றி பெற வைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றி ஐபிஎல் தொடரில் டோனிக்கு கேப்டனாக 50-வது வெற்றியாகும்.

    அதேபோல் நேற்று சான்ட்னெர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 3 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றி டோனிக்கு கேப்டனாக 100-வது வெற்றியாகும். இதன்மூலம் டோனி முக்கியமான சாதனை வெற்றிகளை ருசித்த போட்டிகளில் சென்னை அணிக்கு கடைசி பந்தில் சிக்ஸ் மூலமே வெற்றி கிடைத்துள்ளது.
    இந்தியாவிற்கு எதிராக முதல் 10 ஓவரில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டால், எங்களால் அதிக ரன்கள் குவிக்க இயலும் என்று மிட்செல் சான்ட்னெர் தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் முதல் 10 ஓவரில் தங்களது துள்ளியமான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களை வெளியேற்றிவிட்டார்கள் என்று நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னெர் தெரிவித்துள்ளார்.

    நாளை 4-வது போட்டி நடக்கும் நிலையில் இதுகுறித்து சான்ட்னெர் கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த அணியுடன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால் போதுமான அளவிற்கு திறமையை வெளிப்படுத்தவில்லை. எங்களுடைய திட்டம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்துவதில் தவறு நிகழ்ந்துள்ளது. மிடில் ஆர்டர் வரிசையில் இந்தியாவின் முன்னணி விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களை வெறுக்கும் அளவிற்கு வெளியேற்றிவிட்டனர். அவர்களை விக்கெட்டுக்களை விரைவில் வீழ்த்தும் வழியைத்தேட வேண்டும்.



    பேட்டிங்கை பொறுத்த வரையில் போட்டி முழுவதும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய முயற்சிப்போம். கடந்த போட்டியில் ராஸ் டெய்லர் - டாம் லாம் ஜோடி சிறப்பாக விளையாடியது. அவர்கள் ஆட்டமிழந்த பிறகு எங்களது விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. முதல் 10 ஓவரில் இந்திய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசுகிறார்கள். உண்மையிலேயே எங்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

    முதல் 10 ஓவரில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டால் அதன்பின் எங்களிடம் திறமையான ஹிட் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிறந்த ஸ்கோரை எட்ட இயலும்’’ என்றார்.
    ×