search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் புகார்: ஆக்கி முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கிடம் விசாரணை
    X

    பாலியல் புகார்: ஆக்கி முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கிடம் விசாரணை

    இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கிடம், பாலியல் புகார் தொடர்பாக 4 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார்சிங். இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆக்கி வீராங்கனை ஒருவர் இவர் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.

    பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கூறி இருந்தார். தன் மீதான பாலியல் புகாரை சர்தார்சிங் மறுத்து இருந்தார். இது தொடர்பாக அவரிடம் ஏற்கனவே போலீஸ் விசாரணை நடத்தி இருந்தது.

    இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக சர்தார்சிங்கிடம் இங்கிலாந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். உலக ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. சர்தார்சிங் தற்போது அணியின் மானேஜராக இருக்கிறார்.

    அவர் மீதான பாலியல் புகார் குறித்து யார்க்ஷையர் போலீசார் 4 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணைக்கு இந்திய ஆக்கி அணி நிர்வாகம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×