search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது - சிபிஎஸ்இ
    X

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது - சிபிஎஸ்இ

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என செய்தி தொடர்பாளர் ரமா ஷர்மா தெரிவித்துள்ளார். #CBSE #CBSE10thResults
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன.
     
    மே மாதம் 3-வது வாரத்தில் வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் முன்னதாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளியானது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம் தேதி வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய கல்வி வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் பிளஸ்-2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டது போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளது. வழக்கமாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்தில் 10-ம் வகுப்பு முடிவு வெளிவரும். 



    இதற்கிடையே, இந்த வருடம் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (5-ம் தேதி) வெளியாகும் என தகவல் கசிந்தது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது என சி.பி.எஸ்.இ. செய்தி தொடர்பாளர் ரமா ஷர்மா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு என பரவும் தகவலில் உண்மையில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். #CBSE #CBSE10thResults
    Next Story
    ×