என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார்
Byமாலை மலர்5 May 2019 2:48 AM GMT (Updated: 5 May 2019 2:48 AM GMT)
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாஜக மாவட்ட துணை தலைவர் பயங்கரவாதிகளால் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். #MilitantsAttack #BJP
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள நவ்காமில் வீரிநாக் பகுதியில் வசித்தவர் குல் முகமது மிர். இவர் அனந்தநாக் மாவட்ட பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு குல் முகமது மிர் வீட்டுக்கு சென்ற பயங்கரவாதிகள் சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
பயங்கரவாதிகள் பா.ஜ.க. பிரமுகரை சுட்டுக் கொன்றதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #MilitantsAttack #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X