search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்வாராவில் நீடித்த 56 மணிநேர துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழப்பு
    X

    குப்வாராவில் நீடித்த 56 மணிநேர துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழப்பு

    காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 56 மணி நேரமாக நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். #KupwaraEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
    இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.



    தொடர்ந்து 3-வது நாளாக பயங்கரவாதிகளுடன் வீரர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகிறார்கள். 

    இதுதொடர்பாக காஷ்மீர் எஸ்.பி பானி கூறுகையில், குப்வாரா என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள், 3 சிஆர்பிஎப் வீரர்கள், ஜம்மு-காஷ்மீரின் போலீசார் 2 பேர், குடிமக்களில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். #KupwaraEncounter
    Next Story
    ×