என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார் மோடி - பட்ஜெட்டுக்கு புகழாரம்
Byமாலை மலர்2 Feb 2019 9:20 AM GMT (Updated: 2 Feb 2019 9:20 AM GMT)
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்காளம் மாநிலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி மத்திய பட்ஜெட்டால் பல கோடி மக்கள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார். #Modi #Mamata #ModiblastsMamata
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் 24-வது பர்ஹானா மாவட்டத்தில் அமைந்துள்ள தாக்குர்நகர் பகுதியில் சிறுபான்மையினத்தவர்களான தலித் மட்டுவா சமூகத்தினர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.
சுதந்திரத்துக்கு பின்னர் பல ஆண்டுகளாக முந்தைய ஆட்சியாளர்களால் நாட்டில் உள்ள கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்ட மோடி, இனி அந்த நிலை நீடிக்காது. நவீன இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியோடு ஒன்றிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தின் சமூக வரலாற்றில் இந்த தாக்குர்நகர் பகுதிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. என்னை காண்பதற்காகவும், எனது பேச்சை கேட்டு கருத்துகளை ஆதரித்து, ஆசி வழங்குவதற்காகவும் பெருந்திரளாக இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த மாநிலம் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் எங்கள்மீது செலுத்தும் இந்த அன்பைப் பார்த்து கலக்கமடைந்துள்ள மம்தா பானர்ஜி பா.ஜ.க.வினருக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறார்.
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் வரலாற்று சிறப்புக்குரிய பட்ஜெட். இதன் மூலம் விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் உழைப்பாளிகளும் பயன் பெறுவார்கள்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்பது விவசாயிகளின் கண்களில் மண்ணை தூவுவது போன்ற செயலாகும். நீங்கள் இனி கடன் தள்ளுபடிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எந்த இடைத்தரகர்களின் இடையூறும் இல்லாமல் உங்கள் கணக்குகளில் இனி ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வந்து சேர்ந்து விடும். இதன் மூலம் 12 கோடி சிறு விவசாயிகள் பலனடைவார்கள்.
நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளால் 30-40 கோடி உழைப்பாளிகளும், சுமார் மூன்று கோடி நடுத்தர மக்களும் ஆதாயம் பெறுவார்கள் எனவும் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக, தலித் மட்டுவா சமூகத்தினரின் தலைவியான ‘பரோ-மா’ என்றழைக்கப்படும் பினாப்பானி டெபி-யை மோடி சந்தித்து ஆசி பெற்றார். #Modi #Mamata #ModiblastsMamata
மேற்கு வங்காள மாநிலம் 24-வது பர்ஹானா மாவட்டத்தில் அமைந்துள்ள தாக்குர்நகர் பகுதியில் சிறுபான்மையினத்தவர்களான தலித் மட்டுவா சமூகத்தினர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.
சுதந்திரத்துக்கு பின்னர் பல ஆண்டுகளாக முந்தைய ஆட்சியாளர்களால் நாட்டில் உள்ள கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குறிப்பிட்ட மோடி, இனி அந்த நிலை நீடிக்காது. நவீன இந்தியாவின் வளர்ச்சி என்பது கிராமப்புறங்களின் வளர்ச்சியோடு ஒன்றிணைந்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேற்கு வங்காளத்தின் சமூக வரலாற்றில் இந்த தாக்குர்நகர் பகுதிக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. என்னை காண்பதற்காகவும், எனது பேச்சை கேட்டு கருத்துகளை ஆதரித்து, ஆசி வழங்குவதற்காகவும் பெருந்திரளாக இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களை எல்லாம் பார்க்கும்போது இந்த மாநிலம் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் எங்கள்மீது செலுத்தும் இந்த அன்பைப் பார்த்து கலக்கமடைந்துள்ள மம்தா பானர்ஜி பா.ஜ.க.வினருக்கு எதிரான வன்முறை தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறார்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது என்பது விவசாயிகளின் கண்களில் மண்ணை தூவுவது போன்ற செயலாகும். நீங்கள் இனி கடன் தள்ளுபடிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எந்த இடைத்தரகர்களின் இடையூறும் இல்லாமல் உங்கள் கணக்குகளில் இனி ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வந்து சேர்ந்து விடும். இதன் மூலம் 12 கோடி சிறு விவசாயிகள் பலனடைவார்கள்.
நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சலுகைகளால் 30-40 கோடி உழைப்பாளிகளும், சுமார் மூன்று கோடி நடுத்தர மக்களும் ஆதாயம் பெறுவார்கள் எனவும் மோடி குறிப்பிட்டார்.
முன்னதாக, தலித் மட்டுவா சமூகத்தினரின் தலைவியான ‘பரோ-மா’ என்றழைக்கப்படும் பினாப்பானி டெபி-யை மோடி சந்தித்து ஆசி பெற்றார். #Modi #Mamata #ModiblastsMamata
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X