search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மறுபரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி முறையீடு
    X

    ரபேல் விவகாரம் தொடர்பான தீர்ப்பில் மறுபரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி முறையீடு

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கம் திருப்தியளிப்பதாகவும், போர் விமானங்களின் விலை நிர்ணயம் தொடர்பான  மத்திய அரசின் முடிவு தொடர்பாக விசாரிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என்று கூறியும் மேற்படி பேரம் தொடர்பாக தொடரப்பட்ட 4 வழக்குகளை கடந்த 14-12-2018 அன்று சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம் தொடர்பாக முன்னர் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    அவரது சார்பில் வழக்கறிஞர்கள் தீரஜ் குமார் சிங், மிருனாள் குமார் ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்தனர். #AAP #Rafaleverdict #AAPMP #Rafaleverdictreview 
    Next Story
    ×