search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் விவகாரம்- தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை 8ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
    X

    ஸ்டெர்லைட் விவகாரம்- தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை 8ம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு ஜனவரி 8-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. #Sterlite #TNGovernment #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை தருண் அகர்வால் குழுவினர் அளித்த பரிந்துரையின் பேரில் பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. மேலும், வேதாந்தா நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியில் நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.



    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு வருகிற 8ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #Sterlite #TNGovernment #SC 
    Next Story
    ×