search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல்
    X

    சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #Sterlite #TNgovt #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில்  உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தூத்துக்குடிக்கு உட்பட்ட பல பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட்  ஆலையை  நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின்  சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு தொடரவுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்களது கருத்தை அறியாமல் சுப்ரீம் கோர்ட் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  #Sterlite #TNgovt #SC
    Next Story
    ×