search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலையில் நெய் அபிஷேகம் வருமானம் ரூ.20 லட்சம் குறைந்தது
    X

    சபரிமலையில் நெய் அபிஷேகம் வருமானம் ரூ.20 லட்சம் குறைந்தது

    சபரிமலையில் நெய் அபிஷேகம் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ.20 லட்சம் குறைந்துள்ளது. #Sabarimala
    சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணி முதல் பகல் 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்யலாம். தாமதமாக வரும் பக்தர்கள் இரவு சன்னிதானத்தில் தங்கியிருந்து மறுநாள் நெய் அபிஷேகம் செய்வார்கள்.

    தற்போது சன்னிதானத்தில் இரவு பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பல பக்தர்களால் நெய் அபிஷேகம் செய்ய முடியவில்லை. இதன் மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு நடை திறந்த 16 நாளில் நெய் அபிஷேகம் மூலம் ரூ.41 லட்சத்து 48 ஆயிரம் வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு நெய் அபிஷேக வருமானம் ரூ.21 லட்சத்து 48 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.20 லட்சம் வருமானம் குறைந்துள்ளது. #Sabarimala

    Next Story
    ×