search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் கட்சி தொண்டர் தற்கொலை
    X

    தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் கட்சி தொண்டர் தற்கொலை

    தெலுங்கானாவில் சந்திரசேகர்ராவ் கட்சி தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #Telangana #Suicide
    ஐதராபாத்:

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தொண்டர் குருவப்பா (வயது 42). வருகின்ற தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர்ராவை மீண்டும் முதல் மந்திரியாக்க மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலைக்கு முன் அவர் எழுதியிருந்த கடிதத்தில் இந்த விவரம் இருந்தது. இவர் ஏற்கனவே தனி தெலுங்கானா அமைவதற்காக தற்கொலை செய்ய முயற்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×