என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி பறந்த கோவா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜக-வில் இணைகிறார்கள்?
Byமாலை மலர்16 Oct 2018 3:48 AM GMT (Updated: 16 Oct 2018 3:48 AM GMT)
கோவா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக நேற்று டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் பாஜக-வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #BJP #Congress
பனாஜி:
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை.
அதேவேளையில் 2-வது இடம்பிடித்து பாஜக சுயேட்சை உள்பட சில எம்எல்ஏ-க்களுடன் ஆட்சியமைத்தது. தற்போது மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
விரைவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக கட்சி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் ஆட்சி செய்யும் மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைவார்கள். இதற்காக அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இதில் தயானந்த் மந்த்ரேம் தொகுதியில் முன்னாள் பாஜக முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகரை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Congress
கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை.
அதேவேளையில் 2-வது இடம்பிடித்து பாஜக சுயேட்சை உள்பட சில எம்எல்ஏ-க்களுடன் ஆட்சியமைத்தது. தற்போது மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
விரைவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக கட்சி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் ஆட்சி செய்யும் மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்றிரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைவார்கள். இதற்காக அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இதில் தயானந்த் மந்த்ரேம் தொகுதியில் முன்னாள் பாஜக முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகரை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X