search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பேத்கர் இருந்திருந்தால் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு பிரம்படி நிச்சயம் - சிவசேனா
    X

    அம்பேத்கர் இருந்திருந்தால் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு பிரம்படி நிச்சயம் - சிவசேனா

    மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவசேனா தனது சாமனா நாளிதழில், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்தும், மகாராஷ்டிர மாநில அரசு குறித்தும் கடுமையாக சாடியுள்ளது. #UddhavThackeray #ShivSena #Saamana
    மும்பை:

    பிரதமர் மோடி, நிதிமந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் தலைமையில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிதிமந்திரி அருண் ஜெட்லி, பெட்ரோல் டீசல் மீதான வரியில் 2 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

    இதேபோல், பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் சிவசேனா கட்சி கருத்து பதிவிட்டுள்ளது. அதில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மிகவும் தாமதமாக நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தினமும் 1 லட்சம் கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய தொகை மக்களிடம் இருந்து அரசு கஜானாவுக்கு சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    அதேபோல், கடந்த புதன்கிழமை அன்று, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், அம்பேத்கருக்கும், சத்ரபதி சிவாஜிக்கும் சிலை வைப்பதற்காக மாநிலத்தையே அடகு வைப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ள சிவசேனா, அரசியல் வெற்றிக்காக விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் பலகோடி ரூபாய் பணத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.



    மேலும், அம்பேத்கர் உயிருடன் இருந்து இருந்தால், மாநிலத்தை அடகு வைப்பேன் எனக்கூறிய ஆளும் கட்சிக்கு எதிராக பிரம்பை கையில் எடுத்து இருப்பார் எனவும் சாமனாவில் சிவசேனா தெரிவித்துள்ளது.

    மேலும், மாநிலத்தின் கஜானா காலியாக இருக்கும் நிலையில், நினைவுச்சின்னங்கள் அமைக்கும் பணி நின்றுபோக நேர்வது நல்லது அல்ல என்றும், நினைவுச்சின்னங்களுக்கான மாநிலத்தை இப்போது நீங்கள் அடகுவைப்பதாக சொல்லும் நிலையில் அதை யார் மீட்பது? எனவும் சாமனா நாளிதழில் சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. #UddhavThackeray #ShivSena #Saamana
    Next Story
    ×