என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மத்தியபிரதேசத்தில் சம்பல் கொள்ளையனை சுட்டுக்கொன்ற கிராம மக்கள்
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் நீண்ட காலமாக கொள்ளைகும்பல் செயல்பட்டு வருகிறது. போலீசாரின் நடவடிக்கையால் கொள்ளையர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்.
கடந்த வாரம் மொரேனா கிராமத்தில் சம்பல் கொள்ளையர்கள் 7 பேர் வந்தனர். அதில் 5 பேர் ஆயுதங்களும் துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.
கிராம மக்களை மிரட்டி ரூ. 50 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை பறித்துச் சென்றனர். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு மீண்டும் வந்து கிராம மக்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டனர்.
இந்த முறை கிராம மக்கள் உஷார் ஆனார்கள். கொள்ளையர்களை எதிர்த்து கிராம மக்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். சினிமாவில் வருவது போல் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
அதில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். அந்த பகுதியில் 500 மீட்டர் சுற்றளவுக்கு ரத்தம் சிதறிக் கிடந்தது. எனவே மேலும் கொள்ளையர்கள் துப்பாக்கி குண்டு காயத்துடன் தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் கொள்ளையர் நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் தற்காப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. சிலரிடம் 19-ம் நூற்றாண்டு துப்பாக்கிகளும் உள்ளன. இதை வைத்து தான் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்