என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமாரசாமி மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் - எடியூரப்பா பேட்டி
Byமாலை மலர்21 Sep 2018 5:09 AM GMT (Updated: 21 Sep 2018 5:09 AM GMT)
தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறி உள்ளார். #Yeddyurappa #BJP
பெங்களூரு:
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எல்லை மீறி பேசுவதாக குமாரசாமி சொல்கிறார். எனது வரையறை என்ன என்பது எனக்கு தெரியும். எப்படி பேச வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி தான் அத்துமீறி பேசுகிறார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மைசூருவில் எத்தனை வீட்டுமனைகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். ஊழல்வாதியான குமாரசாமிக்கு என்னை விமர்சிக்க உரிமை கிடையாது. இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.
மந்திரி டி.கே.சிவக்குமார் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவர் என்னை விமர்சித்து இருக்கிறார். தனது மனதில் உள்ள வேதனையில் ஏதேதோ பேசி இருக்கிறார்.
அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கும் பலம் அவருக்கு உள்ளது. இதை அவர் நிரூபிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது சரியல்ல.
உங்களுக்கு (குமாரசாமி) கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால் மத்தியில் எங்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு பதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். பணியவும் மாட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எல்லை மீறி பேசுவதாக குமாரசாமி சொல்கிறார். எனது வரையறை என்ன என்பது எனக்கு தெரியும். எப்படி பேச வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி தான் அத்துமீறி பேசுகிறார்.
சிவராம் காரந்த் லே-அவுட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை விடுத்து மிரட்டும் போக்கில் ஈடுபட்டால் அது எடுபடாது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மைசூருவில் எத்தனை வீட்டுமனைகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். ஊழல்வாதியான குமாரசாமிக்கு என்னை விமர்சிக்க உரிமை கிடையாது. இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.
மந்திரி டி.கே.சிவக்குமார் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவர் என்னை விமர்சித்து இருக்கிறார். தனது மனதில் உள்ள வேதனையில் ஏதேதோ பேசி இருக்கிறார்.
அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கும் பலம் அவருக்கு உள்ளது. இதை அவர் நிரூபிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது சரியல்ல.
உங்களுக்கு (குமாரசாமி) கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால் மத்தியில் எங்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு பதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். பணியவும் மாட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X