search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் - சி.பி.ஐ. விளக்கம்
    X

    விஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் - சி.பி.ஐ. விளக்கம்

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை திருத்தியது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளித்துள்ளது. #VijayMallya #CBI

    புதுடெல்லி:

    பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார்.

    எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசு அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ‘லுக்அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவர் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி லண்டனில் இருந்து நாடு திரும்பினார். தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்த போதும் அவரை சி.பி.ஐ. கைது செய்யவில்லை.

    இதுகுறித்து சி.பி.ஐ. மீது குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் லுக் அவுட் நோட்டீசு திருத்தம் செய்யப்பட்டது.

     


    அதுகுறித்து சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மல்லையா அதே ஆண்டு நவம்பர் 21-ந்தேதி வழக்கு விசாரணையில் ஆஜராக நாடுதிரும்பினார். பின்னர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

    வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்தார். அப்போது அவர் பாராளுமன்ற மேல்- சபையின் எம்.பி.யாக இருந்தார். எனவே தேடப்படும் நபராக அறிவித்த போதும் அவரை கைது செய்ய சட்ட ரீதியான போதிய காரணங்கள் இல்லை. அதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

    இந்தநிலையில் அவரை கைது செய்ய வசதியாக லுக் அவுட் நோட்டீசு திருத்தப்பட்டது. அதன் மூலம் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தகவலை குடியுரிமை துறை சி.பி.ஐ.க்கு தெரிவிக்க வேண்டும் என்ற திருத்தம் வெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது. #VijayMallya #CBI 

    Next Story
    ×