என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேசி பழனிசாமி வழக்கில் செப்டம்பர் 13 வரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது- டெல்லி ஐகோர்ட்
Byமாலை மலர்21 Aug 2018 7:06 AM GMT (Updated: 21 Aug 2018 7:06 AM GMT)
கேசி பழனிசாமி அளித்த புகார் மனு மீது செப்டம்பர் 13-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KCPalasisamy #HighCourt
புதுடெல்லி:
அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்யும்படி கேசி பழனிசாமி அளித்துள்ள மனுவை 4 வாரத்தில் விசாரித்து முடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ஆனால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக செப்டம்பர் 13-ம் தேதி வரை கேசி பழனிசாமி புகார் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். செப்டம்பர் 13-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது கேசி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். #KCPalasisamy #HighCourt
அதிமுக கட்சியின் சட்ட விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்யும்படி கேசி பழனிசாமி அளித்துள்ள மனுவை 4 வாரத்தில் விசாரித்து முடிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு இன்று 2 நீதிபதிகள் கொண்ட அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு எந்த நோட்டீசும் கொடுக்காமல் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X