search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் - ராகுல் காந்தி
    X

    மோடி அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் - ராகுல் காந்தி

    டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மோடி அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Congresscampaign #Modigovt
    புதுடெல்லி:

    புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.

    மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், அசோக்கெலாட் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  பங்கேற்கவில்லை.

    இந்த கூட்டத்துகு பின்னர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தவறியது, பெருகிவரும் ஊழல் ஆகிய அவலங்களை  முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக மக்களிடையே பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். #Congresscampaign #Modigovt  
    Next Story
    ×