search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறந்த எம்.பி.க்களுக்கான விருது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்
    X

    சிறந்த எம்.பி.க்களுக்கான விருது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

    சிறந்த பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான விருதுகளை தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். #OutstandingParliamentariansAward #RamnathKovind
    புதுடெல்லி:

    சிறந்த முறையில் பணியாற்றியதற்காக எம்.பி.க்களுக்கு விருது வழங்கும் விழா பாராளுமன்றத்தின் மத்திய ஹாலில் இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அவர் சிறந்த எம்.பி.க்களுக்கான விருதை வழங்கினார். இந்த விருதுக்கு தேர்வானவர்களின் விவரம் வருமாறு:



    நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 2013-ம் ஆண்டுக்கான விருதும்,  ஹுக்குன் டியோ நரேன் யாதவுக்கு 2014ம் ஆண்டுக்கான விருதும், குலாம் நபி ஆசாத்துக்கு 2015-ம் ஆண்டுக்கான விருதும், திர்னேஷ் திரிவேதிக்கு 2016-ம் ஆண்டுக்கான விருதும், பார்த்ருஹரி மஹ்தாப்புக்கு 2017ம் ஆண்டுக்கான விருதும் வழங்கப்பட்டது. 

    இந்த விழாவில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட பலர் கலந்து கொண்டனர். #OutstandingParliamentariansAward #RamnathKovind
    Next Story
    ×