search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் தடை- சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது ஐகோர்ட்
    X

    பிளாஸ்டிக் தடை- சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்தது ஐகோர்ட்

    சபரிமலையில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீது ஐகோர்ட் முழுமையான தடை விதித்ததுடன், பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. #Sabarimala #AyyappanTemple #PlasticBan #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலையின் புனிதத்தையும், தூய்மையையும் பராமரிக்க அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதன்படி சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் விற்க ஐகோர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை விதித்தது.

    இந்நிலையில், சபரிமலை சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், சபரிமலையில் பிளாஸ்டிக் மீது முழுமையான தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. 

    அதாவது, சபரிமலையில் இந்த வருட மண்டல கால பூஜையின்போது பக்தர்கள் இருமுடியில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டப்பாக்கள் என சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவகை பிளாஸ்டிக் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி பரிந்துரை செய்யும் பொருட்களை மட்டுமே கொண்டு வர முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சபரிமலையில் பிளாஸ்டிக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோதும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து  புகார் எழுந்தது. இதையடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சபரிமலை சிறப்பு ஆணையர் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை அளித்தார். அதன் அடிப்படையில் இன்று ஐகோர்ட் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. #Sabarimala #AyyappanTemple #PlasticBan #KeralaHighCourt
    Next Story
    ×