என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற நேரம் வீணடிப்பு - பா.ஜ.க. எம்.பி.க்கள் 12-ம் தேதி உண்ணாவிரதம்
Byமாலை மலர்6 April 2018 10:01 AM GMT (Updated: 6 April 2018 10:01 AM GMT)
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நேரம் வீணடிக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
புதுடெல்லி:
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. சட்ட தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி, உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி நீடித்தது. இன்று கூட்டத் தொடர் முடிவடைந்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட 38-வது ஆண்டு தினத்தை பா.ஜ.க.வினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், கடந்த 23 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. சட்ட தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி, உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் அமளி நீடித்தது. இன்று கூட்டத் தொடர் முடிவடைந்து பாராளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட 38-வது ஆண்டு தினத்தை பா.ஜ.க.வினர் இன்று கொண்டாடி வருகின்றனர்.
இதைதொடர்ந்து, பாராளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார், கடந்த 23 நாட்களாக பாராளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து வரும் 12-ம் தேதி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பாராளுமன்ற முடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் வரும் 12-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X