என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
Byமாலை மலர்4 April 2018 12:34 AM GMT (Updated: 4 April 2018 12:34 AM GMT)
டெல்லியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டினார்.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது.
அதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளிடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய நிலையில், முதல் முதலாக அதன் தலைவரான ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் எதிர்க்கட்சி தலைவர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரை மட்டுமல்லாது பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுரையும் சந்தித்து பேசினார்.
மேலும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், அ.தி.மு.க. எம்.பி., டாக்டர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பா.ஜனதா கூட்டணியில் உள்ள அப்ணாதளம் கட்சி தலைவர் அனுப்ரியா பட்டேல் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது, பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி வெளியேறியது.
அதைத் தொடர்ந்து அவ்விரு கட்சிகளிடையே வார்த்தை மோதல்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளது.
பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகிய நிலையில், முதல் முதலாக அதன் தலைவரான ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவர் எதிர்க்கட்சி தலைவர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோரை மட்டுமல்லாது பா.ஜனதா கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுரையும் சந்தித்து பேசினார்.
மேலும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், அ.தி.மு.க. எம்.பி., டாக்டர் மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பா.ஜனதா கூட்டணியில் உள்ள அப்ணாதளம் கட்சி தலைவர் அனுப்ரியா பட்டேல் மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டவர்களையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புகளின்போது, பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X