என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுராவில் தனியாக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றது பா.ஜ.க.
Byமாலை மலர்3 March 2018 1:58 PM GMT (Updated: 3 March 2018 1:58 PM GMT)
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பா.ஜ.க. 32 இடங்களில் வெற்றி பெற்று தனியாக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றுள்ளது பா.ஜ.க.வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அகர்தலா:
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது. இதில் திரிபுரா, நாகலாந்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணி வகித்து வந்தது. அதன்பின்னர், பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து ஆளும் கட்சியை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வந்தது.
மாலை 6 மணி நிலவரப்படி பா.ஜ.க. 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து, திரிபுராவில் பா.ஜ.க. தனியாக ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெற்றுள்ளது பா.ஜ.க. தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X