search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் இரண்டு நாள் முதலீட்டார்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
    X

    உ.பி.யில் இரண்டு நாள் முதலீட்டார்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இரண்டு நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #UPInvestorsSummit
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கிலும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கிலும் முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, லக்னோ நகரில் இன்று இரண்டு நாட்கள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    மாநில கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மந்திரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு நாட்டில் இருந்து வந்த பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.



    நாளை மாநாடு நிறைவடைவதை ஒட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். #UPInvestorsSummit #TamilNews
    Next Story
    ×