என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவை மொத்தமாக மாற்ற ராகுல் காந்தி முடிவு
Byமாலை மலர்16 Feb 2018 9:51 PM GMT (Updated: 16 Feb 2018 9:51 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளதையடுத்து அதற்கான புதிய உறுப்பினர்களை ராகுல் காந்தி விரைவில் தேர்வு செய்ய இருக்கிறார். #Congress #TopLeadershipBody
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 16-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் மிக முதல்முறையாக ஒரு முக்கியமான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தற்போது செயல்பட்டு வரும் உயர்மட்ட குழுவை மொத்தமாக களைத்து இருக்கிறார்.
அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், குலாம் நபி அசாத் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள குழுவில் காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களும் இடம்பெற இருக்கிறார்கள்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த குழுவில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும் ராகுல் காந்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுவரை உயர்மட்டக்குழுவின் பொறுப்புகளை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழிகாட்டும் குழு பார்த்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழிகாட்டும் குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. #Congress #TopLeadershipBody #RahulGandhi #tamilnews
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 16-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் மிக முதல்முறையாக ஒரு முக்கியமான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டு இருக்கிறார். அதன்படி தற்போது செயல்பட்டு வரும் உயர்மட்ட குழுவை மொத்தமாக களைத்து இருக்கிறார்.
அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், குலாம் நபி அசாத் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள குழுவில் காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களும் இடம்பெற இருக்கிறார்கள்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த குழுவில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாலும் ராகுல் காந்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதுவரை உயர்மட்டக்குழுவின் பொறுப்புகளை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வழிகாட்டும் குழு பார்த்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த வழிகாட்டும் குழு இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. #Congress #TopLeadershipBody #RahulGandhi #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X