search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி
    X

    காஷ்மீர்: எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல் - ராணுவ வீரர் உள்பட 3 பேர் பலி

    காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா கட்டி பகுதியில் உள்ள எல்லைக்கோட்டின் அருகே இன்று காலை சுமார் 8.30 மணியில் இருந்து பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகளின்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

    இந்த மோதலில் படுகாயம் அடைந்த இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர் மந்தீப் சிங்(23) வீரமரணம் அடைந்தார். இறந்த வீரர் பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது,

    இதேபோல், ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரா, ஆர்னியா, கஞ்சக் எல்லைக்கோட்டு பகுதியிலும் பாகிஸ்தான் படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அடையாளம் தெரியாத ஒரு முதியவரும் காரு ராம் என்ற 15 வயது சிறுவனும் உயிரிழந்தனர்.

    காயமடைந்த ஷீத்லா தேவி, சோனியா தேவி, பில்லு குஜ்ஜார், எல்லைப் பாதுகாப்பு படை உதவி இன்ஸ்பெக்டர் ஜர்னக் சிங் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று பின்னிரவில் இருந்து ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் மோர்ட்டார் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் இன்று பிற்பகல்வரை தாக்குதல் தொடர்ந்து வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #tamilnews
    Next Story
    ×