என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் நலமுடன் வீடு திரும்பினார் - சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்
Byமாலை மலர்9 Jan 2018 7:36 PM GMT (Updated: 9 Jan 2018 7:36 PM GMT)
சிகாகோவில் கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஐதராபாத்:
சிகாகோவில் கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருபவர் சையத் பகர் உசேன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 30-ம் தேதி அங்குள்ள கடைக்கு சென்ற உசேனை, அந்த கடை உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு குண்டுகள் பாய்ந்து உசேன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே, தனது தந்தையின் உடல் நிலை குறித்து தகவலறிந்த உசேன் மகன், இதுகுறித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் கொடுத்து, உதவும்படி கேட்டுக் கொண்டார். சுஷ்மா அறிவுறுத்தலபடி இந்திய தூதரக அதிகாரிகள் செயல்பட்டு உசேனுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசேன் இன்று நலமுடன் வீடு திரும்பினார். இதையறிந்த அவரது மகன், தனது தந்தை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அமெரிக்க அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சிகாகோவில் கொள்ளையரால் சுடப்பட்ட இந்தியர் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சுஷ்மா சுவராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருபவர் சையத் பகர் உசேன். இவர் கடந்த 12 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 30-ம் தேதி அங்குள்ள கடைக்கு சென்ற உசேனை, அந்த கடை உரிமையாளர் மகன் துப்பாக்கியால் சுட்டார். இதில் இரண்டு குண்டுகள் பாய்ந்து உசேன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
இதற்கிடையே, தனது தந்தையின் உடல் நிலை குறித்து தகவலறிந்த உசேன் மகன், இதுகுறித்து வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு தகவல் கொடுத்து, உதவும்படி கேட்டுக் கொண்டார். சுஷ்மா அறிவுறுத்தலபடி இந்திய தூதரக அதிகாரிகள் செயல்பட்டு உசேனுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசேன் இன்று நலமுடன் வீடு திரும்பினார். இதையறிந்த அவரது மகன், தனது தந்தை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காமல் இருக்க அமெரிக்க அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X