என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
Byமாலை மலர்11 Dec 2017 8:11 AM GMT (Updated: 11 Dec 2017 8:11 AM GMT)
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:
கன்னியாகுமரி மகாசபா செயலாளரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழை தமிழக அரசு வழங்குவதுடன் உரிய உத்தரவுகளையும் 8 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று செப்டம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கன்னியாகுமரி மகாசபா செயலாளரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஏழைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன், நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழை தமிழக அரசு வழங்குவதுடன் உரிய உத்தரவுகளையும் 8 வாரத்திற்குள் பிறப்பிக்க வேண்டும் என்று செப்டம்பர் 11-ம் தேதி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய கால அவகாசம் வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X