search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவோதயா பள்ளிகள்"

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    நெல்லை:

    இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு தபால் தலை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளை திறந்திட வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    தொடர்ந்து தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அதனை வழங்கி வரும் அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் தலைமையில் வண்ணார்பேட்டை சாலை தெருவில் உள்ள தபால் நிலையத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

    ×