என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்களுக்கு எதிராக குற்றங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: மராட்டிய அரசு முடிவு
Byமாலை மலர்18 Oct 2017 11:30 PM GMT (Updated: 18 Oct 2017 11:30 PM GMT)
பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கு ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை:
மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. கற்பழிப்பு, மானபங்கம், குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டப்படுதல் போன்ற பல வழக்குகளில், பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதில் ஆண் போலீஸ் அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படுகிறது. மேலும் பெண்கள் அவர்களிடம் வெளிப்படையாக பிரச்சினைகளை கூற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வழக்குகளை முடிப்பத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் எளிதில் தீர்வு காண்பதற்கும், பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கும் ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி மாவட்டந்தோறும் 16 பேர் கொண்ட புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 4 அதிகாரிகளும், 12 போலீஸ்காரர்களும் செயல்படுவார்கள்.
இந்த குழுவிடம் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒப்படைக்கப்படும். தற்போது முதற்கட்டமாக மும்பை, தானே, புனே, நாக்பூர் நகரங்கள் உள்பட 7 பகுதிகளில் நிலுவையில் உள்ள மைனர் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. கற்பழிப்பு, மானபங்கம், குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டப்படுதல் போன்ற பல வழக்குகளில், பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதில் ஆண் போலீஸ் அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படுகிறது. மேலும் பெண்கள் அவர்களிடம் வெளிப்படையாக பிரச்சினைகளை கூற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வழக்குகளை முடிப்பத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் எளிதில் தீர்வு காண்பதற்கும், பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கும் ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி மாவட்டந்தோறும் 16 பேர் கொண்ட புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 4 அதிகாரிகளும், 12 போலீஸ்காரர்களும் செயல்படுவார்கள்.
இந்த குழுவிடம் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒப்படைக்கப்படும். தற்போது முதற்கட்டமாக மும்பை, தானே, புனே, நாக்பூர் நகரங்கள் உள்பட 7 பகுதிகளில் நிலுவையில் உள்ள மைனர் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X