என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் - இந்தியா தகுந்த பதிலடி
Byமாலை மலர்25 Jun 2017 4:32 AM GMT (Updated: 25 Jun 2017 4:32 AM GMT)
காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று காலை முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இருக்கும் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவுஷெரா செக்டார் அருகே இன்று காலை சுமார் 6.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிறிய ரக குண்டுகளால் இந்திய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
அதேபோல், நேற்று மாலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி மோட்டார் குண்டுகளால் தாக்கினர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினரின் சார்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. சேத விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
கடந்த மாதத்தில் பெரும்பாலான நாட்களில் இதே போன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X