என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசாவில் மாவோயிஸ்டு சுட்டுக்கொலை - தலைக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்
Byமாலை மலர்3 Jun 2017 7:33 PM GMT (Updated: 3 Jun 2017 7:33 PM GMT)
ஒடிசாவில் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்டு, போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்
மல்காங்கிரி:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நகேஷ்வர் ராவ் என்ற சின்னாபாய் (வயது 38). ஆந்திரா-ஒடிசா எல்லையில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இவரது தலைக்கு ஒடிசா மாநில போலீசார் ரூ.4 லட்சம் பரிசு அறிவித்து, வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதிக்குள் நகேஷ்வர் ராவ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் தங்களது துப்பாக்கியால் அவரை திருப்பி சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் உயிர் இழந்தார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் நகேஷ்வர் ராவ் என்ற சின்னாபாய் (வயது 38). ஆந்திரா-ஒடிசா எல்லையில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இவரது தலைக்கு ஒடிசா மாநில போலீசார் ரூ.4 லட்சம் பரிசு அறிவித்து, வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில், ஒடிசாவில் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள காட்டு பகுதிக்குள் நகேஷ்வர் ராவ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் தங்களது துப்பாக்கியால் அவரை திருப்பி சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து அவர் உயிர் இழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X