என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறப்பாக பணியாற்றியதற்காக சென்னை மண்டல அமலாக்கப் பிரிவுக்கு விருது: அருண் ஜெட்லி
Byமாலை மலர்29 April 2017 10:06 PM GMT (Updated: 29 April 2017 10:06 PM GMT)
டெல்லியில் நடைபெற்ற விழாவில், சிறப்பான முறையில் பணியாற்றியதற்காக சென்னை மண்டல அமலாக்கப் பிரிவுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விருது வழங்கினார்.
புதுடெல்லி:
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறை சார்பில் அமலாக்க தின விழா டெல்லியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மண்டலம் மற்றும் சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.
2016-2017-ம் ஆண்டில் சிறந்த அமலாக்கப் பிரிவு மண்டலமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை மண்டல அலுவலகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இணை இயக்குனர் பிரசாத் பெற்றுக்கொண்டார்.
இதைபோல் சிறந்த செயல்திறனுக்கான விருது, ஜலந்தர் மண்டல அலுவலகத்துக்கும், பணமோசடி தடுப்பு சட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது, மும்பை மண்டல அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த செயல்திறனுக்கான தனிநபர் விருதுகள் 6 பேருக்கு வழங்கப்பட்டன.
தனிநபர் விருதை, சென்னை அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குனர் வி.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். சென்னையைச் சேர்ந்த இவர், கலால் துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிக பணிமாற்ற அடிப்படையில் அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பிலான, சட்டத்துக்கு புறம்பான பண பரிமாற்றத்தை இவர் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், வரி விதிப்பு சட்டங்களை மக்கள் மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வரி விதிப்பு சட்டங்கள் மீறப்பட்டால் அதை கண்டுபிடித்து தடுக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உள்ளது என்றும், அந்த சட்டங்களை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் அரசின் வருவாயை பெருக்க அமலாக்கப் பிரிவு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறை சார்பில் அமலாக்க தின விழா டெல்லியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மண்டலம் மற்றும் சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விருதுகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.
2016-2017-ம் ஆண்டில் சிறந்த அமலாக்கப் பிரிவு மண்டலமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை மண்டல அலுவலகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இணை இயக்குனர் பிரசாத் பெற்றுக்கொண்டார்.
இதைபோல் சிறந்த செயல்திறனுக்கான விருது, ஜலந்தர் மண்டல அலுவலகத்துக்கும், பணமோசடி தடுப்பு சட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது, மும்பை மண்டல அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த செயல்திறனுக்கான தனிநபர் விருதுகள் 6 பேருக்கு வழங்கப்பட்டன.
தனிநபர் விருதை, சென்னை அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குனர் வி.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். சென்னையைச் சேர்ந்த இவர், கலால் துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிக பணிமாற்ற அடிப்படையில் அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பிலான, சட்டத்துக்கு புறம்பான பண பரிமாற்றத்தை இவர் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், வரி விதிப்பு சட்டங்களை மக்கள் மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வரி விதிப்பு சட்டங்கள் மீறப்பட்டால் அதை கண்டுபிடித்து தடுக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உள்ளது என்றும், அந்த சட்டங்களை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் அரசின் வருவாயை பெருக்க அமலாக்கப் பிரிவு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X