search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதம்பாக்கத்தில் பறக்கும் படை சோதனை: காரில் 270 வாக்காளர் அட்டை பறிமுதல்
    X

    ஆதம்பாக்கத்தில் பறக்கும் படை சோதனை: காரில் 270 வாக்காளர் அட்டை பறிமுதல்

    ஆதம்பாக்கத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டது. #Voterid #LokSabhaElections2019

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், பொருட்கள், தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 270 வாக்காளர் அடையாள அட்டை சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆதம்பாக்கம், சுரேந்தர் நகர் மேடவாக்கம் மெயின் ரோட்டில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன.

    இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 270 வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது. இது தொடர்பாக காரில் இருந்த 7 பேரை அதிகாரிகள் பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாக்காளர் அட்டை அனைத்தும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடையது என்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தமாக வாக்காளர் அட்டை கிடைத்தது எப்படி? எங்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Voterid #LokSabhaElections2019

    Next Story
    ×