search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி பிடிக்காததால் த.மா.கா. மாவட்ட தலைவர் காங்கிரசில் இணைந்தார்
    X

    கூட்டணி பிடிக்காததால் த.மா.கா. மாவட்ட தலைவர் காங்கிரசில் இணைந்தார்

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி பிடிக்காததால் மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் காங்கிரசில் இணைந்தார். #tamilmaanilacongress #congress #gkvasan

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளது. இதில் பா.ஜனதாவும் இடம் பெற்று இருப்பதால் த.மா.கா. நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் கே.கே.குருசாமி கட்சியில் இருந்து விலக முடிவு செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் நீக்கினார்.

    இதையடுத்து குருசாமி தனது ஆதரவாளர்கள் 150 பேருடன், பஸ்களில் இன்று சத்தியமூர்த்தி பவன் வந்தார். அங்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.பி. மாணிக்க தாகூர் செய்திருந்தார். #tamilmaanilacongress #congress #gkvasan

    Next Story
    ×