search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டுவில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
    X

    வத்தலக்குண்டுவில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

    வத்தலக்குண்டுவில் கல்லூரி மாணவி நோய் கொடுமையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பிளீஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் அனுசுயா (வயது 19). அதே பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அனுசுயா பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று கேசவமூர்த்தி மற்றும் அவரது மனைவி உறவினர் வீட்டு விசேஷத்துக்காக சென்று விட்டனர்.

    வீட்டில் தனியாக இருந்த அனுசுயா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீடு திரும்பிய அவரது பெற்றோர் மகள் பிணமாக தொங்குவதைக் கண்டு கதறி அழுதனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அனுசுயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×