என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரூர் அருகே அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது
Byமாலை மலர்9 Jun 2019 2:58 PM GMT (Updated: 9 Jun 2019 2:58 PM GMT)
அரூர் அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. உடலை வாங்க யாரும் வராததால் போலீசார் அடக்கம் செய்தனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருக்கம்பட்டியில் இருந்து, காரப்பாடிக்கு செல்லும் வனப்பகுதியில், அங்குள்ள மரத்தில், தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
இறந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனதால், அழுகிய நிலையில் பெண்ணின் உடல் இருந்தது.
இதுகுறித்து வனத்துறையினர் அளித்த புகாரின்படி சம்பவ இடத்திற்கு அரூர் போலீசார் சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மருக்கலாம்பட்டியை சேர்ந்த சந்தானத்தின் மனைவி ஜெயா (வயது 49) என்பதும், அவர் ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது.
ஜெயாவின் உடலை கேட்டு உறவினர்கள் யாரும் வராததால் போலீசார் அவரது உடலை அரூரில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X