என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கைது செய்யப்பட்ட தொழிலாளி சிறையில் அடைப்பு
Byமாலை மலர்2 Jun 2019 3:51 PM GMT (Updated: 2 Jun 2019 3:51 PM GMT)
வால்பாறை அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலையை சேர்ந்தவர் ரூபன் (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று ரூபன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமியின் ஆடைகளை கழற்றி பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி ரூபனிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் ரூபனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X