search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்
    X

    இந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்

    இந்துக்கள் பற்றிய இழிவான கருத்துக்களை பரப்பி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    இந்து மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் முருகபூபதி, செயலாளர் நாகராஜ், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன், இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோர் திருப்புல்லாணி போலீஸ் நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது புகார் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மே 12-ந்தேதி அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என கமல் பேசியுள்ளார். 2017-ம் ஆண்டு வார இதழுக்கு அளித்த பேட்டியில் காவி தீவிரவாதம் பரவிவருகிறது என கூறியுள்ளார்.

    தனது பேச்சின் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் இந்துக்களை இழிவுபடுத்தும் வேலையை திட்டமிட்டு செய்து வருகிறார். இது எங்களைப் போன்ற இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. உரிய சட்டப்பிரிவின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.


    Next Story
    ×