search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி குரங்கணி மலைச்சாலையில் கல்லூரி மாணவர் பஸ் மோதி பலி
    X

    போடி குரங்கணி மலைச்சாலையில் கல்லூரி மாணவர் பஸ் மோதி பலி

    போடி குரங்கணி மலைச்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பஸ் மோதி பலி நண்பர் படுகாயம்

    போடி:

    கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 21). கல்லூரி மாணவர். இவரது நண்பர் குப்பி நாயக்கன்பட்டியை சேர்ந்த அகேஷ் (21).

    இவர்கள் இருவரும் நேற்று போடி அருகே குரங்கணி மலை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது குரங்கணியில் இருந்து போடியை நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மாணவர் திருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானர். அகேஷ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருமூர்த்தியின் உடல் போடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×