என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாணரப்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை கல்லறை தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது33). இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அந்தோணிராஜ் பெயிண்டர் வேலைபார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவர் தினமும் மதுகுடித்துவிட்டு வருவதால் அறிவழகி மனவேதனை அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் தகராறு செய்து விட்டு அறிவழகி 2 குழந்தைகளையும் விட்டு விட்டு கும்டிபூண்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் 2 குழந்தைகளையும் அந்தோணிராஜின் தாயார் கற்பகம் கவனித்து வந்தார். மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் அந்தோணிராஜ் மனவேதனை அடைந்து அளவுக்கு அதிகமாக மதுகுடிக்க தொடங்கினார்.
கடந்த 31-ந்தேதி இரவு அந்தோணிராஜ் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் விழித்த அந்தோணிராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். பின்னர் அவர் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் கற்பகம் எழுந்து பார்த்த போது மகன் அந்தோணிராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி தூக்கில் பிணமாக தொங்கிய அந்தோணிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்