search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் அருகே வெவ்வேறு விபத்தில் டீ மாஸ்டர் உள்பட 2 பேர் பலி
    X

    சூலூர் அருகே வெவ்வேறு விபத்தில் டீ மாஸ்டர் உள்பட 2 பேர் பலி

    சூலூர் அருகே வெவ்வேறு விபத்தில் டீ மாஸ்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    சூலூர் அருகே உள்ள சங்கோதி பாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). டீ மாஸ்டர். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் மேட்டுப்பாளையம்- நெல்லித்துறை ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள செங்காட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார் (25). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- செஞ்சேரிமலை ரோட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சம்பவஇடத்திலேயே தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×