search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் ஆசியா மரியம்
    X
    கலெக்டர் ஆசியா மரியம்

    நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு - கலெக்டர் பார்வையிட்டார்

    நாமக்கல் பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை கலெக்டர் பார்வையிட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கான மண்டல அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பினை கலெக்டர் ஆசியாமரியம் நேரில் பார்வையிட்டார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில் தெரிவித்ததாவது:-

    தேர்தல் பணிகளில் மண்டல அலுவலர்களுக்கான பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 10 முதல் 12 வரை வாக்கு சாவடிகள் ஒரு மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டு வரம்பில் இருக்கும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகள் குறித்த விபரங்களையும் அதற்கான வழித்தடங்களையும் அறிந்து இருக்க வேண்டும். வாக்கு சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், இருக்கைகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகளில் குறைபாடுகள் இருந்தால் மண்டல அலுவலர்கள் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    மண்டல அலுவலர்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாறுதல் செய்யப்பட்டுள்ள வாக்கு சாவடிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.

    மேலும் வாக்குசாவடிகளில் கைபேசி மற்றும் தொலைபேசி இணைப்பு இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக அனுமதி இல்லாத ஊர்வலங்கள், வாகனங்கள், சுவர் விளம்பரங்கள், கொடிகம்பங்கள் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு சாவடிகளுக்கு அருகில் உள்ள தேர்தல் தொடர்பான அலுவலர்களின் தொலைபேசி எண் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட வாக்கு சாவடிக்கு மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் தொடர்பான இதர படிவங்கள் வந்து சேர்ந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்கு சாவடிகளில் காவல் துறை துணை நிலை படையினர் வரப்பெற்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில் மாற்று மின்னணு வாக்கு பதிவு எந்திரம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்கு பதிவு எந்திரம் சரியான முறையில் சீல் இடப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும். இறுதியாக காவல் துறை பாதுகாப்புடன் வாக்குபதிவு எந்திரங்களை சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் முறையாக ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். #tamilnews

    Next Story
    ×