search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
    X

    மதுரை அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி

    மதுரை அருகே கிணற்றில் மூழ்கிய 9-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

    மதுரை, மார்ச். 13-

    மதுரை சிந்தாமணியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது மகன் ஆரோக்கிய தமிழரசு (வயது 15) 9-ம் வகுப்பு மாணவன்.

    சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் பாம்பன்சாமி நகரில் உள்ள கிணற்றுக்கு ஆரோக்கிய தமிழரசு குளிக்கச் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் நீரில் மூழ்கினான். இதில் மூச்சு திணறிய ஆரோக்கிய தமிழரசு, பரிதாபமாக இறந்தான்.

    அவனியாபுரம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் விக்னேஸ்வரன் (15). 10-ம் வகுப்பு படித்து வந்த இவன், சின்னம்மை பாதிப்புக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டான். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விக்னேஸ்வரன் பரிதாபமாக இறந்தான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×